ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு
எச்சரிக்கையாயிருங்கள்;
ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு:
நானே கிறிஸ்து என்று
சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்;
கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்;
இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே
ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும்,
ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்;
பஞ்சங்களும்,
கொள்ளைநோய்களும்,
பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில்
உண்டாகும்.
இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
ஊர் எங்கிலும் கொலைகள்
இயேசுவின் நாமத்தின்னிமிதம் நீங்கள் சகல ஜனங்களாலும்
பகைக்கப்படுவீர்கள். ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர்
பகைப்பார்கள்.
அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை
வஞ்சிப்பார்கள்.
அக்கிரமம் மிகுத
அன்பு தணிந்துபோம்.
ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும்
சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும்
சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.
அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று
எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.
ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும்
வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும்
செய்வார்கள்.
இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால்
புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால்
நம்பாதிருங்கள்.
அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன்
ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின்
சத்துவங்கள் அசைக்கப்படும்.
அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது,
மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை
பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்;
அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு
மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.
அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே
வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது